tamilnadu

img

கிரிப்டோகரன்சி மீதான தடை ரத்து - உச்ச நீதிமன்றம் உத்தரவு

கிரிப்டோகரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை  ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை வாங்கவும், விற்கவும் இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது.
பிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. கிரிப்டோகரன்சி பணப்பரிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளித்து இருந்தது.

இந்த சூழலில் கிரிப்டோகரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.